நவரசா ஆந்தாலஜி – இன்மை விமர்சனம்

நடிகர் சித்தார்த்
நடிகை பார்வதி
இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத்
இசை விஷால் பரத்வாஜ்
ஓளிப்பதிவு வீரஜ் சிங்
நடிகை பார்வதியின் கம்பெனியில் வேலை பார்க்கிறார் சித்தார்த். இவர் வேலை விஷயமாக ஒரு கையெழுத்து வாங்க பார்வதியின் வீட்டுக்கு செல்கிறார். அப்போது இருவரும் பேசிக் கொள்கின்றனர். அந்த சமயத்தில் பார்வதி இளம் வயதில் செய்த சில விஷயங்களை சித்தார்த் சொல்ல ஆரம்பிக்கிறார்.

அதைக் கேட்டு பார்வதி அதிர்ச்சி அடைகிறார். இறுதியில் சித்தார்த்துக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது என்பதை பார்வதி கண்டுபிடித்தாரா? அவர் பயப்படுவதற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

சித்தார்த்தும், பார்வதியும் இருவரும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். அதிலும் பார்வதியின் பழைய வாழ்க்கையைப் பற்றி சித்தார்த் சொல்லச் சொல்ல பார்வதி தவிக்கும் தவிப்பு, நடிப்பின் உச்சம். இவருக்கு இணையாக சிறு வயது பார்வதியாக வரும் அம்மு அபிராமியும் திறம்பட நடித்து இருக்கிறார்.

நவசரத்தில் ‘பயம்’ என்பதை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத். ஒரு 30 நிமிடக் கதையில் முழு நீளப் படத்துக்கு உண்டான சுவாரசியத்தைக் கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வும் கச்சிதமாக உள்ளது. விஷால் பரத்வாஜின் பின்னணி இசை கதையோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது. வீரஜ் சிங்கின் ஒளிப்பதிவும் கச்சிதம்.

மொத்தத்தில் ‘இன்மை’ இனிமை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!