நான் அப்படி செய்தும் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை..!!! பிரபல நடிகை புலம்பல்..!!


பட வாய்ப்புகள் இல்லாத நடிகைகள் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, நடிகை ஷ்ரேயா தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.

அந்த வகையில், நடிகை நீது சந்திராவும் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.


இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள நீதுசந்திரா, “துரதிஷ்டவசமாக எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனது திறமைகளும் கவனிக்கப்படவில்லை.

அதனால் தான், என்னுடைய கவர்ச்சி படத்தை வெளியிட்டிருந்தேன்.

ஆனாலும், இதுவரை எனக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


யாவரும் நலம், ஆதி பகவன், தீராத விளையாட்டு பிள்ளை ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை நீது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#