சுசி கணேசனின் ‘திருட்டு பயலே’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, விவேக், ரோபோ ஷங்கர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
தற்போது படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றது.இதனிடையே, திருட்டு பயலே-2 படத்தில் பாபி சிம்ஹாவுடன் ரொமான்டிக் காட்சிகளில் நடித்த அனுபவம் பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.அது குறித்து அவர் பேசுகையில், “ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹாவின் நடிப்பை பார்த்தேன். ஒரு நல்ல நடிகர் அவர்.
ஆனால், ரொமான்டிக் காட்சிகளில் அவர் நடித்து இதுவரை பார்த்ததில்லை. ஆனால், தற்செயலாக அவருடன் ரொமான்டிக்காக நடிக்க வேண்டிய சூழ்நிலை இப்படத்தில் ஏற்பட்டது.படத்தின் ஒரு காட்சியில், பாபி என்னை கட்டிப்பிடிக்க வேண்டும்.
அந்த ஷாட்டுக்கு நானும் படக்குழுவும் தயாராக இருந்தோம்.ஷாட் ரெடி என்று சொன்னதும் பாபி வந்து என்னை கட்டிப்பிடித்தார். அடுத்த நொடி அவர் கைகள் சிவந்து போனதை பார்த்தேன். அவர் மிகவும் பதற்றத்துடன் இருப்பதை உணர்ந்தேன்.
பின்பு நாங்கள் அவரிடம் பேசி, நிலைமையை சரி செய்தோம். ரொமான்டிக் காட்சிகள் வந்தாலே, அவரை ஒரு குழந்தையை போல நான் நடத்த வேண்டியதாக இருந்தது.
இதேபோல், இன்னொரு கட்டிப்பிடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது என்னை அவர் மிகவும் இறுக்கமாக கட்டிப்பிடித்தார்.அந்த சமயம் என்னால் ஒரு வார்த்தைக் கூட பேச முடியவில்லை.
அதற்கு பிறகு, அவருக்கு ‘பப்பி சிம்ஹா’ என்று பெயர் வைத்தோம்” என்று சொல்லி சிரித்தார் அமலா பால்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#