சந்தர்ப்பம் பார்த்து பதிலடி கொடுத்த பிரபல நடிகை..!!! யாருக்குனு தெரியுமா..?


இரண்டு மாதத்திற்கு முன்பு விழித்திரு படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தன்ஷிகா பேசும் போது, பலருக்கு நன்றியை தெரிவித்தார்.

அப்போது மேடையில் அமர்ந்திருந்த டி.ராஜேந்தரை மறந்து விட்டார்.

இதனால் கடுப்பான டி.ராஜேந்தர் பொது மேடையிலேயே தன்ஷிகாவை கண்டபடி விமர்சித்து அவரை கதறி அழ வைத்தார்


தன்ஷிகா மன்னிப்பு கேட்டும், டி.ராஜேந்தர் அவரை கடுமையாக விமர்சித்தார்.

இதனால் திரையுலகில் பலரும் டி.ஆருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். பொறுமையுடன் வேறு எதுவும் பேசாமல் இருந்த தன்ஷிகாவுக்கு ஆதரவுகள் பெருகியது.

தற்போது அவர் அதுகுறித்து மனம் திறந்துள்ளார். இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது.

எனக்கு கோபம் அதிகமாக வரும். அதை கட்டுப்படுத்த தியானம் செய்கிறேன்.

அதனால் தான் இப்போது வரை அவ்விஷயத்தில் அமைதியாக இருக்கிறேன்.

ஆன்மீகப்பாதையில் போக ஆரம்பித்ததும் நான் சாந்தமாகிவிட்டேன்.


டி.ஆர் சார் தான் ஒரு ஆன்மீகவாதி என கூறினார். ஆனால் எந்த ஒரு ஆன்மீகவாதியும் குரலை உயர்த்தி பேசமாட்டார்.

இப்பிரச்சனையை இத்துடன் முடித்துகொள்ள விரும்புகிறேன் என தன்ஷிகா கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#