சின்மயியிடம் ஆதங்கம் இருக்கு… ஆனால் ஆதாரம்..? என்ன சொன்னார் தெரியுமா..?


மீ டூ குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் சின்மயி பேசியது எதுவும் ஒப்புக் கொள்ள முடியவில்லை. தன் கல்யாணத்துக்கு ஏன் வைரமுத்துவை அழைத்தீர்கள் என்பதற்கு கார்க்கி என் நண்பர், அப்பாவுக்கு பத்திரிகை வைக்கவில்லையா என கேட்பார், என்பதற்காக தான் பத்திரிகை வைத்தேன் என்றார். அப்படிப்பார்த்தால் தற்போது கார்க்கி நண்பர் இல்லையா?

ஏன் கோர்ட்டுக்கு போகவில்லை என்பதற்கு ஆதாரத்தை தேடி வருகிறேன் என்கிறார். ஒருவர் மீது அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டை வீசுகிறார் என தெரியவில்லை. இதுவரை வெறும் வாய்வழியாக மட்டுமே பேசி வருகிறார்.

மீ டூ பெண்களுக்கான பாதுகாப்புக்கான மிகச்சிறந்த இயக்கம். ஆதாரங்கள் முழுமையாக இருந்தால மட்டுமே இந்த மீ டூ இயக்கம் முழுமையாக மக்களிடத்தில் பிரதிபலிக்கும். இல்லை என்றால் இந்த புகார்கள் வெறும் அவதூறாக நின்றுவிடும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!