அம்மணி பாலிவுட் படம் ஒன்றில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனருக்கும், அவருக்கும் இடையே காதல் என்று பேச்சாக கிடந்தது. அந்த சமயத்தில் பாலிவுட்டில் அதிகம் பேசப்பட்ட காதல் கதை அவர்களுடையது தான். அந்த இயக்குனரின் வண்டவாளம் எல்லாம் தற்போது தண்டவாளத்தில் ஏறியுள்ளது.
வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் நடிகைகளை தனது வீட்டிற்கு அல்லது அலுவலகத்திற்கு வரச் சொல்லி அவர்களை ஆடையை அவிழ்த்துவிட்டு நிற்குமாறு கூறியுள்ளார் அந்த இயக்குனர். மேலும் ஒரு பெண் பத்திரிகையாளரிடம் தனது மர்ம உறுப்பை காட்டியுள்ளார். இளம் நடிகையை படுக்கைக்கு அழைத்துள்ளார்.
இளம் நடிகை ஒருவரை ஆடிஷனுக்காக தனது அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளார் அந்த இயக்குனர். தன் அலுவலகத்திற்கு வந்த நடிகையின் முன்பு நிர்வாணமாக நின்றதுடன் தன்னுடன் உறவு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார் இயக்குனர். அவர் பிறந்த மேனியாக நின்றதை பார்த்த நடிகை தலை தெறிக்க ஓடிவிட்டார்.
அந்த இயக்குனர் எப்பொழுதுமே பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வார் என்று பல நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்த அளவுக்கு கீழ்த்தரமானவரையா தமிழ் படங்களில் நடிக்கும் அந்த நடிகை காதலித்தார் என்று விமர்சிக்கப்படுகிறது. அவரை காதலிக்கவில்லை, சகோதரர் போன்று என்று நடிகை அளித்த விளக்கத்தை நம்ப யாரும் தயாராக இல்லை. நடிகைக்கு அது முதல் காதல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதற்கெடுத்தாலும் பெண்களிடம் தனது மர்ம உறுப்பை வெட்கம் இன்றி காட்டிய அந்த இயக்குனரின் வாழ்வில் பல காதலிகள். அதில் பெரும்பாலானோர் அழகான நடிகைகள். அதிலும் ஒரு நடிகை எல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அவருடன் ரொமான்ஸ் செய்திருக்கிறார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!