பிக்பாஸ் நிகழ்ச்சி இனி 100 நாட்கள் இல்லையாம்..? அப்போ எத்தனை நாட்கள் தெரியுமா..?


விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து திடீரென நடிகை மும்தாஜ் நேற்று திடீரென தானாகவே வெளியேறினார். தமிழ்ப்பெண் தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம் என்று ரித்விகாவுக்கு அறிவுரை கூறிய மும்தாஜ், இந்தி பெண்களான ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவை அனைவரும் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என்று வீட்டை விட்டு வெளியேறும்போது அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

மும்தாஜ் சென்றதால் தற்போது வீட்டில் 6 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களில் பாலாஜி மட்டும் ஆண் போட்டியாளர்.

இந்த நிலையில் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெறவிருப்பதாகவும், அடுத்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறவுள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார். அதற்கு அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெறும். இந்தப் போட்டியில் ஜனனி உள்பட 4 பேர் இடம்பெறுவார்கள் என்றும் கமல் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!