மும்தாஜ் கொடுத்த டாஸ்க்கை செம்மையா சொதப்பிய சென்றாயன்..!! கலாய்த்த போட்டியாளர்கள்..!!


வைஷ்ணவி என்னை பற்றி புறம் பேசினால், அவளை மூக்குக்குள் விரலை விட்டு மூளையை திருப்பிவிடுவேன் என்று சென்ட்ராயன் கூறினார்.

பிக்பாஸ் 2′ நிகழ்ச்சி சூடுபிடித்து வருகிறது. 16 போட்டியாளர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் இதுவரை மமதி சாரி, அனந்த் வைத்தியநாதன், நித்யா, ரம்யா ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

ஹவுஸ்மேட் அனைவரும் தங்கள் பேர் கெடாதபடி பாதுகாப்பாக விளையாடி வந்தனர். ஆனால் இந்த வாரம் அனைவரும் தங்களின் சுயரூபத்தை காட்டி வருகிறார்கள்.

ஹவுஸ்மேட்டுக்குள் நடக்கும் அனைத்து விஷயங்களை வைஷ்ணவி ஒன்றுக்கு இரண்டாக பிறரிடம் கூறிவருகிறார்.

இதில் சென்ட்ராயன், பொன்னம்பலம், வைஷ்ணவி ஆகிய மூவரும் அமர்ந்து பேசுகையில், பொன்னம்பலம் சென்ட்ராயனிடம் வைஷ்ணவியை வைத்து கொண்டு எதுவும் பேசாதே ஏதாவது குளறுபடி பன்னிவிடுவாள் என்று கூறினார்.


இதற்கு சென்ட்ராயன். என் விஷயங்களை பிறரிடம் புறம் பேசுவது தெரிந்தால் வைஷ்ணவி மூக்குக்குள் விரலை விட்டு மூளையை திருப்பி விடுவேன் என்று பொன்னம்பலத்திடம் பதில் கூறியுள்ளார்.

இந்த வாரம் எங்க ஏரியா உள்ள வராத என்ற டாஸ்க் நடந்து வருகிறது. இதில் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொரு பகுதிகளையும் கைப்பற்ற பெரும் போராட்டமே நடந்து வருகிறது.

அதேபோல் மும்தாஜ் அணி பாத்ரூம் ஏரியாவை கைப்பற்றியுள்ளது எனவே சென்ட்ராயன் பாத்ரூம் செல்ல மும்தாஜ் கொடுக்கும் டாஸ்க்கை முடிக்க வேண்டும்.

இதில் நேற்று இரவு சென்ட்ராயன் பாத்ரூம் செல்ல வேண்டும் என்று மும்தாஜிடம் கூறினார். அதற்கு மும்தாஜ் செல்பி புள்ள பாடலை ஐந்து முறை பாடிவிட்டு உள்ளே போங்கள் என்ற டாஸ்க் வழங்கினார்.

இந்த பாடலை பல்வேறு சிரமத்துக்கு பிறகு ‘டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு., நீ பிட்டு பிட்டா பைட்டு பன்னா ஏறும் கிருக்கு’ என்று டேனி உதவியோடு ஐந்துமுறை பாடிகாட்டினார்.

இந்நிலையில் இந்த டாஸ்க் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஹவுஸ்மேட் அனைவரும் யார் உண்மையாக இருக்கிறார்கள் யார் பொய்யாக நடிக்கிறார்கள் என்று தெரியாமல் குழப்பத்தில் புலம்பி ஒவ்வொரு அணியாக பிரிந்து பிறரை புறம் பேசி வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!