நீ வராதே.. செருப்படி கொடுப்பேன்.. கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மஹத்..!!


நடிகர் மஹத் பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகளை பின்பற்றாததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும்.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரை ஜெயிலில் இருந்து வெளியில் எடுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதாவது மும்தாஜ் டீமில் யாராவது ஒருவர் மஹத்திற்கு பதிலாக ஜெயிலில் இருந்தால் மஹத் வெளியில் வந்து விளையாடலாம் என பிக்பாஸ் அறிவித்தார்.

பாலாஜி தாமாக முன்வந்து ஜெயிலுக்கு செல்ல முடிவெடுத்தார். அதை பார்த்து கோபமான மஹத் பாலாஜியை திட்டினார் “நீ வராதே.. செருப்படி கொடுப்பேன்.. வைஷ்ணவியை அனுப்பு” என சத்தமாக கத்தினார்.

ஆனால் இருப்பினும் மஹத் கேட்டது எடுபடவில்லை. பாலாஜி தான் அவருக்கு பதிலாக சிறையில் அடைக்கப்பட்டார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!