கடமைக்கென நாட்களை கழித்துக்கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்..!! கடுப்பில் மக்கள்..!!


பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் என்றால் டிவி முன் ஆர்வமாக அமரும் காலம் போய், தற்போது இரண்டாவது சீசன் போர் அடிக்கிறது என சொல்லும் அளவுக்கு தான் உள்ளது. இதை பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் இதற்காக போட்டியாளர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளார். “5 வாரங்களாக யாரும் விதிமுறைகளை பின்பற்றி நடந்துகொள்ளவில்லை. வெறும் கடமைக்கென நாட்களை கழித்துக்கொண்டிருப்பதாக தான் தெரிகிறது” என கூறி மஹாத்தை உடனடியாக சிறையில் அடைக்க சொல்லியுள்ளார்.

மேலும் என்ன நடந்தது என்பது இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தான் தெரியும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!