ஆத்தாடி.. பொது இடத்தில் குழந்தைக்கு பால் கொடுத்து அசத்திய நடிகை கஸ்தூரி..!!


நடிகை கஸ்தூரி பெண்களுக்கு எதிராக நடக்கும் பல விவகாரங்களில் குரல் கொடுத்து வருகிறார்.

இதனிடையே, அண்மையில் திருநங்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால், அவர்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான தமிழ்ப்படம்-2 வில் ஒரு குத்து பாடலுக்கு கஸ்தூரி நடனமாடி இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் ஒரு ஃபேஷன் ஷோவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபடி ராம்ப்வாக் செய்த மாடலை கஸ்தூரி புகழ்ந்திருந்தார்.

இதையடுத்து, ரசிகர் ஒருவர் டுவிட்டரில், “நடந்துக்கிட்டே பால் கொடுக்குறது என்ன மாதிரியான புத்திசாலித்தனம் மேடம் ?? உங்கள மாதிரி 4 பேரு பேசணும்னு சொல்லி விளம்பரத்துக்காக பண்ற கேவலமான யுக்தி அது.. தாய்மைக்குன்னு ஒரு மரியாதை இருக்கு..அத கெடுக்க வேண்டாம்” என வறுத்தெடுத்திருந்தார்.

ஆனால், அதற்கும் சளைக்காமல் கஸ்தூரி பதில் டுவிட்டில், “நான் கார் ஓட்டிகிட்டே , சமைச்சுக்கிட்டே, பஸ்ஸுல, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே எல்லா சந்தர்ப்பத்துலயும் பால் குடுத்துருக்கேன்.

மேடையில ஒரு வினாடிவினா போட்டியில பங்கெடுத்துகிட்டே பால் கொடுத்திருக்கேன். கனடாவுல ஒரு MP பால் கொடுத்துக்கிட்டே நாடாளுமன்ற வோட்டெடுப்புல கலந்துக்கிட்டாங்க.” என பதிவிட்டுள்ளார்.

கஸ்தூரியின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!