பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வம்சம் தொடரில் நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா. இது தவிர வேறு பல சீரியல்களிலும் பிரியங்கா நடித்து வந்தார்.

சென்னை வளசரவாக்கம் காமக்கோடி நகரில் கணவருடன் நடிகை பிரியங்கா வசித்து வந்தார். 32 வயதாகும் இவருக்கு குழந்தைகள் இல்லை. இது தொடர்பாக கணவன் –மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கணவன், மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வளசரவாக்கத்தில், தனியார் தொலைக்காட்சி தொடர் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!