காலா நடிகர் மீது விஷால் பட நடிகை பாலியல் குற்றச்சாட்டு – அதிர்ச்சியில் திரையுலகம்..!!


பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நானா படேகர். இவர் மீது முன்னணி நடிகை ஒருவர் வெளிப்படையாகவே பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீராத விளையாட்டு பிள்ளை, ஆஷிக்கு பானாயா போன்ற படங்களில் நடித்துள்ள தனுஸ்ரீ தத்தா தான் இவர் மீது குற்றம்சாட்டியுள்ளார்.


அவர் அளித்துள்ள பேட்டியில் “நானா படேகர் பெண்களை தரக்குறைவாக நடத்துவார் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் யாரும் அதை பெரிதாக பேசுவதில்லை. அவர் நடிகைகளை அடித்துள்ளார், பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் ஆனால் ஒரு மீடியாவில் கூட அது பற்றி ஒரு செய்தி கூட வெளியானதில்லை” என கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு சினிமா துறையில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.