நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் இருவருக்குமான பிரச்சனை முடிந்துவிட்டது என்பது போல டிவியில் காட்டினர்.
இந்நிலையில் தற்போது ஒரு பிரபல மீடியாவுக்கு பேட்டியளித்துள்ள நித்யா “இன்னும் பிரச்சனை அப்படியே தான் இருக்கிறது. ஆறு ஏழு வருஷமாக கஷ்டத்தை அனுபவித்த நான் எப்படி ஒரே மாதத்தில் மாறிவிடுவேன். போஷிகா பேசியது அவளாக பேசியது இல்லை.. அவளை அப்படி பேசவைத்துள்ளார்கள் பிக்பாஸ் டீம். நான் பேசியதை கூட எடிட் செய்துவிட்டார்கள்” என நித்யா கூறியுள்ளார்.
“நீ உள்ளே இருக்கிறதுதான் எனக்கும் நல்லது. போய் விவாகரத்து தொடர்பான நீதிமன்ற வேலைகளை முடிச்சிடுறேன்!” என்று தான் பாலாஜியிடம் கூறிவிட்டு வந்தாராம்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!