தன்னுடைய ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சமந்தா..!! எப்படி தெரியுமா..?


தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான சமந்தா, ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தளபதி விஜய்யுடன் மட்டும் ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த பல படங்கள்மாஸ் வெற்றியை பெற்றுள்ளது. நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது ரசிகர்கள் ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சமந்தா.

ட்விட்டரில் ரசிகர் ஒருவர், ‘1000 முறை உங்களைப் பற்றி பதிவு செய்திருப்பேன். ஆனால், இதுவரை ஒரு பதில் கூட நீங்கள் பதிவு செய்ததில்லை. ஆனால், உங்கள் மேல் உள்ள காதல் இதுவரைக்கும் 0.000000001 கூட குறைந்ததில்லை. ஐ லவ் யூ என்று பதிவு செய்திருந்தார்.

இதற்கு நடிகை சமந்தா, நன்றி என்று பதிவு செய்திருக்கிறார். இந்த பதிவு வந்தவுடன் ரசிகர் இன்ப அதிர்ச்சியடைந்திருக்கிறார். மேலும், நான் ஜெயிச்சுட்டேன் என்றும், பெருசா சாதிச்ச ஃபீல் என்றும் பதிவு செய்து தன்னுடைய சந்தோஷத்தை ஆரவாரமாக வெளிப்படுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!