பிக்பாஸ் வீட்டில் தாடி பாலாஜி மனைவியின் கோபத்தால் என்ன நடந்தது தெரியுமா..?


பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், வந்ததில் இருந்து எல்லாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கும் நித்யா, இன்றும் தனது கோபத்தை வெளிப்படையாகவே காட்டியிருக்கிறார்.

மும்தாஜ், ஓரிடத்தில் அமர்ந்து இருக்குமாறு நித்யாவிடம் கூறும் போது அதை எப்படி நீ கூறலாம்? என கோவத்துடன் சொல்கிறார்.. மேலும் மமதியிடமும் ’நான் அறிவுரை தேவைப்படும் போது கூப்பிடுறேன், இப்போது அறிவுரை வேணாம்’ என்று அவரிடம் கோவத்தை உமிழ்கிறார்.

இதையெல்லாம் பார்த்து தாடி பாலாஜி, ’எல்லாரிடமும் கெட்ட பேர வாங்கிட்டா, கோவம் தலைக்கு ஏறுது’ என்று அவரது ஆதங்கத்தை தெரிவிக்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் அப்படி என்னதான் நடந்தது என்பதை இன்று இரவு தான் அறிய முடியும்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!