வீடியோ வெளியிட்ட பிரபல நடிகைக்கு இப்படியொரு நிலைமையா..!! போலிஸ் அதிரடி..!!


பிரபல சின்னத்திரை நடிகை நிலானியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து நடிகை நிலானி வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், பொலிஸ் உடை அணிந்து நடிப்பதற்கு வெட்கப்படுவதாகவும், இன்னொரு ஈழம் உருவாகிவிடக் கூடாது எனவும் கூறி வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாக பரவியது.

இந்நிலையில் அவர் வெளியிட்ட வீடியோவுக்காக குன்னூரில் தங்கியிருந்த நிலானியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

வீடியோ வெளிவந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் பொலிசார் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!