ஜூலியுடன் செல்ஃபி எடுத்த ரசிகர்..!! என்ன கொடுமைடா..!!!


ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெடுத்துக் கொண்டார் ஜூலி. ஜூலின்னா போலி என்று அனைவரும் சொல்லும்படி நடந்து கொண்டார். தற்போது அவர் கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் பார்வையாளராக வந்த டிசிஎஸ் ஊழியரான சத்யா ஜூலியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினார்.


சத்யா ஜூலியுடன் செல்ஃபி எடுக்க விரும்புவதை அறிந்த கலா மாஸ்டர் அவரிடம் ஜூலி எதுக்கு உங்களுக்கு பிடிக்கும், நிறைய பேர் அவரை திட்டுகிறார்களே என்று கேட்டார்.

அதற்கு சத்யாவோ, நான் அவரின் ரசிகன். எனக்கு அவரை பிடிக்கும் என்று பதில் அளித்தார்.

இவ்வளவு பெரிய ஸ்டேஜில் வந்து நான் ஜூலியோட ரசிகன் என்று சொல்வதற்கு தனி கட்ஸ் வேண்டும். அதனால் நன்றி சத்யா என்றார் ஜூலி.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!