ஆத்தாடி.. பிரபல நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா..? வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


ரம்யா கிருஷ்ணன் தனது 15 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர் . 1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். அப்போது இவர் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார்.

30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நாட்டியப் பேரொளி பத்மினிக்குப் பிறகு, நீண்ட காலத்திற்குத் தொடர்ச்சியாகக் கதாநாயகியாக நடித்த, நடித்து வரும் நடிகை என்றும் ரம்யா கிருஷ்ணன் வரலாறூ படைத்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவிக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் வெற்றிப் பெற்ற ஒரே நடிகை ரம்யா கிருஷ்ணன்.


இந்த ஐந்து படவுலகின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த சிறப்பைப் பெற்றிருக்கின்றார்.

தமிழில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ், கார்த்திக், அர்ஜூன், மோகன், சுரேஷ், தெலுங்கில் என். டி. ராமராவ், சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வெங்கடேஷ், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், கன்னடத்தில் விஷ்ணுவர்தன், ரவிச்சந்திரன், உபேந்திரா, ஹிந்தியில் அமிதாப் பச்சன், வினோட் குமார், ஷாருக் கான், சஞ்சய் தத், அனில் கபூர், கோவிந்தா என முன்னணி கதாநாயர்களுடன் ஜோடி சேர்ந்து புகழ் பெற்றார்.

80-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே சினிமாவுக்கு வந்த போதும், தமிழ்த் திரையுலகம் அவரின் திறமையைக் கண்டு கொள்ளவில்லை. மனம் தளராது போரடியவருக்குத் தெலுங்குப் படவுலகம் கைக்கொடுக்க, அங்கே முன்னணி கதாநாயகி அந்தஸ்தைப் பிடித்தார்.


ரஜினிகாந்துக்கே சவால் விடும் வகையில் நீலாம்பரியாக அவர் வாழ்ந்து காட்டி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு கதாநாயகனுக்கு ஈடாக, ஒரு நடிகைக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது ரம்யா கிருஷ்ணனுக்கு.

2003 ஆண்டு கிருஷ்ணா வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு, ரித்விக் என்ற மகனும் பிறந்தார். பொதுவாக ரம்யாகிருஷ்ணன் அவரது மகனை பெரும்பாலும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைத்து வருவது இல்லை. தற்போது அவரது மகனை நீங்கள் பார்த்தல், 50 வயதை நெருங்கும் ரம்யாகிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஆச்சர்யப்பட்டு தான் போவீர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!