அந்த ஒரு காரணத்துக்காகதான் பெண் வேடத்தில் நடித்தேன்..!! பிரபல நடிகர் ஓபன் டாக்..!!


பள்ளி நாடகத்தில் பெண் வேடமிட்டு நடித்த போது எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இந்தாண்டு மட்டும் இவர் நடித்த மூன்று படங்கள் வெளியாகவுள்ளது. தற்போது சினிமா ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் படங்கள் ஏதும் வெளியாகவில்லை. எல்லா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டள்ளது.

இந்நிலையில் அண்மையில் ஒரு பத்திரிக்கையின் கலந்துரையாடலில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அங்கு அவரிடம் பலரும் பல கேள்விகளை கேட்டனர்.


அவரும் தன்னுடைய பள்ளிக்கூட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன், பள்ளியில் படிக்கும் போது ஆங்கில நாடகத்திற்காக பெண் வேடமிட்டு நடித்தாராம். அப்போது அவருக்கு மிகவும் கூச்சமாக இருந்ததால் முகத்தை கண்ணாடியில் பார்க்கவில்லையாம்.

ஆனால் தனக்கு பிடிச்ச டீச்சர் கேட்டுக் கொண்டதால்தான் நடித்தாராம். எல்லோரும் அவர் நடித்த நாடகத்தைப் பாத்து ரசித்தார்களாம். பின்னர் அந்த பெண் வேமிட்ட புகைப்படத்தை பிடிக்காமல் சில நாட்கள் கழித்து கிழித்து எறிந்துவிட்டாராம். அடுத்த ஆண்டும் மீண்டும் பெண்ணாக டீச்சர் நடிக்கச் சொன்னதற்கு மறுத்து விட்டாராம். அதன் பிறகு ‘ரெமோ’ படத்தில் தான் பெண் வேடத்தில் நடித்தாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி