விழா மேடையில் கதறி அழுத ஸ்ரீதேவியின் மகள்..!! எதனால் தெரியுமா..?


பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தது அனைவரும் அறிந்ததே. இவரின் மறைவு இந்திய திரையுலக ரசிகர்களை மிகுந்த அதிர்சிக்குள்ளாக்கியது. இவரது மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர்.

மூத்த மகள் ஜான்வி கபூரின் முதல் திரைப்படமான “தடக்” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் நடிகை ஜான்வி கபூர். இந்த விழாவில் பங்கேற்ற ஜான்வி கபூரிடம் பத்திரிகையாளர் ஒருவர் ஸ்ரீதேவியை பற்றி கேள்வி எழுப்பினார்.

அதுவரை நன்றாக இருந்த ஜான்வி கபூர் திடீரென அழஆரமபித்து விட்டார். நான் அம்மாவை மிகவும் மிஸ் செய்கிறேன். அவர் இந்த தருணத்திற்க்காகத்தான் காத்துக்கொண்டிருந்தார். ஆனால், இப்போது என்னுடன் அவர் இல்லை என கதறி கதறி அழ ஆரம்பித்து விட்டார்.

அவரை தங்கை குஷி கபூர் சமாதனம் செய்ய முயற்சி செய்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!