நடிகையின் தற்கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா..? வெளியாகிய தகவலால் அதிர்ச்சி..!!


தற்கொலை செய்யும் அளவுக்கு தனக்கு பிரச்சினைகள் இருக்கிறது என்று நடிகை சார்மிளா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நல்லதொரு குடும்பம், தையல்காரன், கிழக்கே வரும் பாட்டு, நான், இவன் வேற மாதிரி போன்ற பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளவர் சார்மிளா.

அவருக்கு சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் திருமண உறவும் திருப்தியாக அமையவில்லை.

இது குறித்து சார்மிளா கூறுகையில், நான் பணக்கார குடும்பத்தில் பிறந்து இருந்தும் எதிர்பாராத சம்பவங்கள் வாழ்க்கையில் நடந்து விட்டன. இப்போது என்னிடம் பணம் இல்லை. ஆரோக்கியத்தையும் இழந்து விட்டேன்.

தற்கொலை செய்யும் அளவுக்கு எனக்கு பிரச்சனை உள்ளது, இந்த மாதிரி விடயங்கள் என் வாழ்க்கையில் முன்பே நடந்து இருந்தால் தற்கொலை செய்து இருப்பேன். ஆனால் இப்போது சாக முடியாது.

படுக்கையில் இருக்கும் எனது தாயாரை கவனிக்க வேண்டி உள்ளது. மகன் நலனும் முக்கியம். அதனால் தற்கொலை முடிவை எடுக்கவில்லை.

இப்போது பெரிய டைரக்டர்களிடம் வாய்ப்பு கேட்டால் அவர்கள் தர தயாராக இல்லை. எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்கள்.

திருமணத்துக்கு பிறகு வாழ்க்கை தலைகீழாக மாறியது. எனது வீட்டையும் நிலத்தையும் விற்க வைத்தனர்.

வீடு போன பிறகு மன அழுத்தம் ஏற்பட்டு உடல் எடை குறைந்து எனது ஆரோக்கியமே கெட்டுப் போனது என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!