காலா படத்தை முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா..?


இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் “காலா”. இது தான் தற்போது சமூகவலைதளத்தில் சென்ஷேசன். எதிர்ப்புகள் இருந்தாலும் அண்மைகாலமாக இப்படம் அதிகம் பேசப்பட்டுவருகிறது.

ரஜினிகாந்துடன் நடிகைகள் ஹூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அஞ்சலி பாட்டில் நடிகர்கள் சமுத்திரகனி என பலர் நடித்துள்ளார்கள். மும்பை வாழ் தமிழரான திரவியம் நாடார் என்பவரின் நிஜ கதையை மையமாக வைத்து படம் வெளியாகியுள்ளது.வெளிநாடுகளில் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புகள் கிடைத்துள்ளது.

மேலும் நல்ல விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஜப்பானில் இருந்து Yasuda, Satsuki ஆகியோர் படம் பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளனர்.

மதுரை, சென்னை, சேலம் என இன்று அதிகாலையிலேயே தியேட்டர் வாசல்களில் தாரை தப்பட்டைகள் முழங்க தொடங்கிவிட்டன. மேலும் கத்தி படத்தில் சமந்தாவுக்கு குரல் கொடுத்த ரவீனா படத்தின் முதல் காட்சிக்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

முதல் பாதி ரஜினியின் ஸ்பெஷல் என்றும், இரண்டாம் பாதி ரஞ்சித்தின் ஸ்பெஷல் என எல்லாம் நன்றாக இருப்பதாகவும், ரஜினியின் காதல், கிளைமாக்ஸ் போர்சன் சூப்பர் என கருத்துகள் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!