அஜித் – ஷாலினி காதலை சேர்த்து வைக்க போராடிய அந்த பிரபலம் யார் தெரியுமா..?


சினிமா நட்சத்திரங்களில் பலபேர் தங்களுடன் நடிக்கும் நடிகை, நடிகர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படியாக செய்து கொண்வர்கள்தான் நடிகை அஜீத்தும், நடிகை ஷாலினியும். நட்சத்திர ஜோடி என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது அஜீத் – ஷாலினி ஜோடிதான். இவர்களுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிறது. இதுநாள் வரை இவர்களின் சொந்த விஷயங்கள் பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நேரத்தில் நடிகை ஷாலினியின் தங்கையும், நடிகையுமான ஷாமிலி அளித்த பேட்டி ஒன்றில், அஜீத் – ஷாலினி காதல் திருமணம் பற்றி கூறியுள்ளார்.


அப்போது அவர், ‘‘அவர்கள் இருவரும் முதலில் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர். மாமா அஜீத் கொடுக்கும் பூக்களை யாருக்கும் தெரியாமல் நான்தான் அக்கா ஷாலினியிடம் கொடுப்பேன்.

இதுபோல் அவர்களுடைய காதலுக்கு நான்தான் பக்கபலமாக இருந்தேன். அஜீத், அவர் மனைவி ஷாலினிக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அதுவே அவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஒரு காரணம்’’ என்றார் நடிகை ஷாம்லி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!