நான் பிக்பாஸ் வீட்டுக்குச் சென்றால்.. அந்த வீடே பற்றி எரியும்..!! பிரபல நடிகை அதிரடி..!!


விரைவில் பிக்பாஸ் சீசன் 2 தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். சமீபத்தில் சீசன் 2வின் டீசர் வெளியாகி ட்ரெண்ட்டாகி வருகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் நடிகை ராய் லட்சுமி கலந்துகொள்ளவுள்ளார் என்ற செய்தி பரவியது. இதுகுறித்து நடிகை ராய் லட்சுமி அளித்து பதில். “அடிக்கடி ஏன் என்னைப் பற்றி இதுபோல வதந்தியை பரப்பி வருகிறீர்கள். நான் பிக்பாஸ் வீட்டுக்கு சென்றால்.. அந்த வீடே பற்றி எரியும். அப்போது அந்த வீட்டில் உள்ளவர்கள் இதை தாங்கிக் கொள்ளமாட்டார்கள். நான் இதில் கலந்து கொள்ளாதது அவர்களுக்கு நல்லது’’ என ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!