மீண்டும் காதலா..? பரபரப்பை ஏற்படுத்திய விஷாலின் அதிரடி டுவிட்..!!


மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் இரும்புத்திரை. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சண்டக்கோழிக்கு பிறகு மிகவும் பிடித்த படம் இரும்புத் திரை என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஷால் நடிப்பில் தனி முத்திரை பதித்த திரைப்படம் என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் படம் ரிலீஸான அன்று, சிலருக்கு நன்றி தெரிவித்து, டுவிட் செய்துள்ளார். அதில், வரலட்சுமியை தனது நாடி, நரம்பு என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக விஷாலும், வரலட்சுமியும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த நிகழ்வு, அவர்கள் இருவருக்கும் இடையில் பிரிவேதும் இல்லை என்று சுட்டிக் காட்டுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!