பாலியல் தொல்லையால் இப்படியொரு நிலைமையா..? ரகசியத்தை போட்டுடைத்த வரலக்ஷ்மி..!!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை வரலக்ஷ்மி. தற்போது, சண்டைக்கோழி 2, தளபதி62 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் சரத்குமாரின் மகள் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், தன் வீட்டு வேலைக்காரன் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டது பற்றி இப்போது பேசியுள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் வரலக்ஷ்மி கூறியதாவது, ” என் அப்பாவிடம் சுந்தரமூர்த்தி என்பவர் வேலை செய்தார். அப்போது அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.

அப்போது, இதை யாரிடம் கூறுவது என்று கூட எனக்கு தெரியவில்லை. நான் வளர்ந்த பிறகு தான் பாலியல் தொல்லைக்கு நான் ஆளானது எனக்கு புரிந்தது. அதனால் குழந்தைகளுக்கு மற்றவர்கள் தொடுவது பற்றி சொல்லிக்கொடுங்கள். யாரும் தகாத இடத்தில் தொட அனுமதிக்காதீர்கள் என சொல்லிகொடுங்கள்” என வரலக்ஷ்மி கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!