படப்பிடிப்பில் சிவாவுக்கு மிரட்டல் விடுத்த நடிகை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


சுமார் 15 வருடங்கள் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஸ்டாராக வளம் வந்தவர் நடிகை சிம்ரன். திருமணதிற்கு பிறகு, நடிப்பதை நிறுத்திக்கொண்டார். ஆனால், அவ்வப்போது சில படங்களில் மட்டும் தலைகாட்டி வந்தார். தற்போது, நடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “வணங்காமுடி: என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துவருகிறார்.

அதனையடுத்து, பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “சீமராஜா” படத்தில் வில்லேஜ் வில்லி வேடமேற்று நடித்துள்ளார் சிம்ரன்.

படத்தின் ஹீரோவான சிவகார்த்திகேயனுக்கு பிரதான வில்லியாக படம் முழுதும் வரவுள்ளார் சிம்ரன். சிவகார்த்திகேயனை மிரட்டல் விடுக்கும் காட்சிகளில் மிரட்டி எடுத்துவருகிறாராம் சிம்ரன்.

திருமணத்திற்கு பிறகு இவர் நடித்து வந்தாலும் எந்த படமும் சரியான கம்பேக் படமாக சிம்ரனுக்கு அமையவில்லை. ஆனால், சீமராஜா திரைப்படம் சிம்ரனுக்கு நல்ல ரீ-என்ட்ரியாக அமையும் என கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!