40 வயதில் திருமணமா..? வைரல் தகவலால் அதிர்ச்சி கொடுத்த நடிகை..!!


சினிமாவில் கலக்கி வந்த நடிகைகள் மார்கெட் அவுட்டான பிறகு வண்டியை எடுத்துக்கொண்டு தொலைகாட்சி சீரியல்கள் பக்கம் வந்துவிடுவது வழக்கம். ஆனால், அவ்வாறு செய்வது சில நடிகைகள் மட்டுமே. இப்போதெல்லாம், தொழிலதிபரை பார்த்து திருமணம் செய்துகொண்டு சென்றுவிடுகிறார்கள். வீட்டோடு இருந்து விடுகிறார்கள்.

அந்த வகையில், நடிகை கௌசல்யாவும் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகின. இதனை கௌசல்யா மறுத்தார். அப்படி ஏதாவது நடந்தால் கண்டிப்பாக நானே கூறுவேன் என்று கூறினார்.

இந்நிலையில், நடிகை யுவஸ்ரீ-யும் 40 வயதை தாண்டி திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இது குறித்து கூறுகையில், நான் நிறைய சீரியல்களில் நடித்துவிட்டேன். இப்போது, பொன்மகள் சீரியலில் நடித்து வருகிறேன்.

எனது திருமணம் குறித்து கேட்கிறார்கள், திருமண வயதில் வரன் அமையவில்லை. பிறகு வயது ஆகிவிட்டது. தற்போது எனக்கு வயது 40 ஆகிறது. இதற்கு மேல், திருமணம் தேவையா..? என்ற முடிவில் வாழ்ந்து வருகிறேன் என்று பேசியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!