பிரபல பாடகருக்கு விமான நிலையத்தில் இப்படியொரு அவமானமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


வெளிநாட்டு விமான நிலையங்களில் இந்தியர்கள் அசிங்கப்படுத்தப்படுவது தொடர் கதையாகி வருவது மக்களை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படியான ஒரு கசப்பான சம்பவம் பிரபல பாலிவுட் பாடகரான அட்னான் சாமி அவர்களுக்கும் அவரது குழுவிற்கும் ஏற்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இவர்கள் அனைவரும் சமீபத்தில் குவைத் சென்றுள்ளனர், அங்கு விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் இந்திய நாய்களா என இவர்களை திட்டியுள்ளனர். இது குறித்து அட்னான் சாமி வேதனையுடன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வராஜ் உறுதி அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி