சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சன்னிலியோன் புகைப்படம்..!!


சிறுமிகள் மீது நடந்து வரும் பாலியல் வன்மங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த நிலையில் நடிகை சன்னிலியோன் தனது வளர்ப்பு மகளை அரவணைத்து பாதுகாப்பாக வைத்து இருப்பது போன்று வித்தியாசமான புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.


அதில், “உன்னை இந்த உலகில் உள்ள தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். உன்னை பாதுகாப்பதற்காக என் உயிரை தருவதற்கும் தயாராக இருக்கிறேன். பெற்றோர்களே என்ன விலை கொடுத்தேனும் குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என்று கருத்து பதிவிட்டு உள்ளார். இதற்காக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சன்னிலியோனை பாராட்டி வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி