என்னுடைய 5 வயதிலேயே அந்த கொடுமையை சந்தித்து விட்டேன்..!! பிரபல நடிகை ஆவேசம்..!!


ஐந்து வயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவாவில் சிறுமி பாலியன் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது குறித்து பேசியுள்ளார்.

“நானும் சிறு வயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். 5 வயதில் நடந்ததை நான் எப்படி பெற்றோர்களிடம் கூறமுடியும். அப்போது எனக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாது. பாலியல் தொல்லைகள் பெரும்பாலும் நமக்கு தெரிந்தவர்கள் மூலமாகத்தான் நடக்கிறது.” என்று கூறியுள்ளார்.

மேலும், “பாலியல் துன்புறுத்தல் மிக தவறானது. அதை ஒழித்தால்தான் அமைதியான வாழலாம்” என்றும் கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி