பாலிவுட் சினிமாவின் பிரபல சினிமா குடும்பம் என்றால் அந்த பட்டியலில் அமிதாப் பச்சனின் குடும்பமும் ஒன்று. இவரது மகள் அபிஷேக் பச்சன் தான் உலக அழகி ஐஸ்வர்யா ராய்யை திருமணம் செய்துகொண்டார். அமிதாப் 50 வருடங்களாக சினிமா துறையில் கலக்கி வருபவர். இவருக்கு தமிழ் நாட்டிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மூத்த கலைஞராக இருந்தாலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தோற்றத்தில் மாற்றம் கொண்டு வர நினைப்பவர் தான் இவர். தற்போது 75 வயதை எட்டியுள்ள இவர், முதுமை தெரியாதவாறு பல படங்களில் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து வருகிறார்.
தெலுங்கு திரையுலகில் ராம் சரண் தயாரிக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் தற்போது சிரஞ்சீவியுடன் இணைந்து அமிதாப் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் கழித்து தொடங்கவிருக்கிறதாம். சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தின் 1st லுக் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அமிதாப் தோற்றம் வித்யாசமாக உள்ளது. இது அமிதாப்பா என்று யோசிக்கும் விதத்தில் துறவி தோற்றத்தில் வித்யாசமாக இருக்கிறார் அமிதாப்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி