எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர் சுசானவை திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை இன்ப கரமாக இருக்கும் என்று நடிகை சுஜிதா ஆர்யாவிடம் கூறியுள்ளார்.
பிரபல சீரியல் நடிகையான சுஜிதா ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில், பங்கேற்ற இவர் ஆர்யாவுக்கு எந்த பெண் பொருத்தமாக இருப்பார் என தெரிவித்தார்.
அவர் கூறுகையில், சுசானா ஆர்யாவிற்கு நல்ல மனைவியாக மட்டுமில்லாமல் ஒரு தாயாகவும் இருப்பார் என தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.
இது குறித்து தனது கருத்தை கூறிய சுசானா, நான் மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டேன். நீங்க இப்படி சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி இறுதி வரை பல டாஸ்க்குகள் கொடுக்கப்படும். இறுதிவரை போராடி வெல்பவரைத்தான் ஆர்யா திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி