பிரபல நடிகையின் தாயார் போலீசில் புகார்..!! பின்னணியில் அதிர்ச்சி தகவல்..?


வங்கி அதிகாரி என கூறி நடிகை வரலட்சுமியின் தாயார் சாயாதேவியிடம் நூதன முறையில் பண மோசடி செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோட்டூர்புரம், கோட்டூர் கார்டன் 3வது மெயின் ரோடு பகுதியில் சாயாதேவியின் வீடு உள்ளது. இவர் கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் ஓர் புகார் மனு அளித்துள்ளார்.அதில் சிட்டி வங்கியின் மேலதிகாரி எனக் கூறி பிரவீண் குமார் என்பவர் தன்னிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு எனக்கு பரிசுத் தொகை விழுந்துள்ளதாகவும் அதை அவர்கள் என் வங்கி கணக்குக்கு அனுப்பி வைபதாகவும்,அப்படி அனுப்ப வேண்டும் என்றால் நான் எனது ஏடிஎம் விவரம் முழுவதையும் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார்.

இதனால் எனது விவரங்களையும் கூறினேன்.அதன் பிறகு சிறிது நேரத்தில் எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.8,312 மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தேன் இதன் பிறகுதான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். தன்னை ஏமாற்றி தனது வங்கி கணக்கிலிருந்து திருடிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். சாயாதேவி, நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் புகார் மனுவை குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி