சின்ன நம்பர் நடிகையை போல் முடிவெடுத்த ஆண்ட்ரியா..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


நல்ல நடிப்புத் திறமை உள்ள நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை அதே சமயம் பெரிய ஹீரோக்களின் படங்களில் 2 பாட்டுக்கு மட்டும் ஆடிவிட்டு செல்லும் நடிகைகளுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது என்று உண்மையை பளிச்சென்று கூறினார் ஆண்ட்ரியா.

இந்நிலையில் அவர் திரையுலகம் பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

என் வாழ்க்கையில் தரமணி முக்கியமான படம். நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் கொண்ட படம் அது. தரமணி மட்டும் அல்ல ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அருவியும் வெற்றி பெற்றது.


ரசிகர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். படம் பார்ப்பவர்கள் அந்த பெண் என்ன செய்தது? சும்மா பாடல்களுக்கு வந்து டான்ஸ் மட்டும் ஆடிவிட்டு போனது என்கிறார்கள். அழகாக இருப்பதை தவிர்த்து நடிகைகள் நன்றாக நடிக்கவும் வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தரமணி படத்திற்கு பிறகு பல ஸ்க்ரிப்டுகள் வந்தது. அதில் ஒரு இயக்குனர் மது அருந்தி, தம்மடிக்கும் கதாபாத்திரத்துடன் வந்தார். ஏன் என்று கேட்டால் தரமணியில் நான் அப்படி செய்தேன் என்றார். அது என்ன ஆண்கள் மது அருந்தி, தம்மடித்தால் மட்டும் சரியா என்று கேட்பதற்காக தரமணியில் அந்த காட்சி வைக்கப்பட்டது.


தரமணி பட ரிலீஸ் தள்ளிப் போன நேரம் திரையுலகம் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து நடிப்பை விட்டுவிடலாம் என நினைத்தேன். புது பட வாய்ப்பு வந்தபோது எல்லாம் தரமணி எப்பொழுது ரிலீஸாகும் என்று தான் கேட்டார்கள்.

நாம் நடித்த படம் ரிலீஸாகவில்லை என்றால் அது நடிகருக்கு விஷம் போன்றது. சும்மா இருந்து ரிலீஸுக்காக காத்திருப்பது கொடுமை. நல்ல வேலை படம் ரிலீஸாகிவிட்டது என்றார் ஆண்ட்ரியா.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி