ஓவியாவின் ரகசியத்தை போட்டுடைத்த ஆரவ்..!! அதிர்ச்சியில் வாயடைத்துபோன ரசிகர்கள்..!!!


கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழின் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்களில் ஒருவர் ஆரவ். அதில் பரிசு தொகையையும் வென்றார்.

இந்த நிகழ்ச்சியின் போது, பிக்பாஸ் வீட்டில் இருந்த ஓவியாவுக்கும், ஆரவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆரவ் ஓவியாவின் காதலை ஏற்க மறுத்தார். ஆரவ மீது இருந்த காதலால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.


ஓவியாவை காதலிக்கவில்லை என்று ஆரவ் கூறியதால், அவரை மனதார விரும்பிய ஓவியா மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. இதை பின்னர் மறைமுகமாகவும் ஓவியா தனது காதலை தெரிவித்தார். பின்னர் ஓவியா சகஜமான நிலைக்கு திரும்பினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. ஓவியா ஆர்மி என ரசிகர்கள் வ்ட்டம் பெருகியது. ஓவியாவின் சினிமா மார்க்கெட் சூடு பிடித்த நிலையில் பிரபல நிறுவனங்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் தேடி வந்தன. விளம்பர படங்களிலும் நடித்தார். இது போல் ஆரவுக்கும் தனி அடையாளமும், புதிய பட வாய்ப்புகளும் கிடைத்தன.


பழைய சம்பவத்தை மறந்து ஓவியாவும், ஆரவும் இப்போது சாதாரணமாக பழகுகிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். ஓவியாவை தனக்கு ஏன் பிடிக்கும் என்ற காரணத்தை கூறியுள்ள ஆரவ், “நாம் நாமாக இருப்பது தான் உலகத்திலேயே மிக கஷ்டமான வி‌ஷயம். ஏதோ ஒரு வகையில் பெரும்பாலான இடங்களில் நாம் நடித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் ஓவியா அப்படி இல்லாமல் எல்லா இடத்திலும் அவராகவே இருக்கிறார். அவரை எனக்கும், எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. ரசிகர்கள் அவருக்காக தனி படை உருவாக்கும் அளவுக்கு ஓவியா பெயர் பெற்றதற்கும் அது தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார். இதனால் ஓவியா மிகவும் ஆச்சர்யம் அடைந்துள்ளார். ரசிகர்கள் அதிர்ச்சியும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி