பிரபல இளம் நடிகை தற்கொலை..!! பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!


சினிமா மற்றும் டிவி நடிகைகள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ் சினிமா மட்டும் அல்லாமல், தெலுங்கு, இந்தி என பல மொழி சினிமாக்களில் இதே பிரச்சினை தான்.

இதற்கிடையே, கொல்கத்தாவில் 23 வயது இளம் டிவி நடிகை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெளமிதா சாஹா என்ற அந்த நடிகை பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்காக தெற்கு கொல்கத்தாவின் ரீனெண்ட் பார்க்கிலுள்ள ஒரு அபார்ட்மெண்டில் வீடெடுத்து தனியாக வசித்து வந்தார். சில டிவி சீரியல்களில் நடித்து வந்த அவருக்கு போதிய வாய்ப்புகள் இல்லாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், இரவு வெகு நேரமாக மெளமிதாவை அவரது பெற்றோர்கள் மொபைலில் அழைத்துள்ளனர். ஆனால், அழைப்பு எடுக்கப்படாமல் இருக்கவே, அவர்கள் சந்தேகம் அடைந்து உடனே வீட்டின் உரிமையாளருக்கு தகவலைத் தெரிவித்துள்ளனர். பிறகு போலீஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மெளமிதா சாஹா ஃபேனில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் போலீஸார், இந்த தற்கொலைக்கு காரணம் மன உளைச்சலா அல்லது வேறு எதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி