பிரபல நடிகையின் பிடிவாதத்தால் கடுப்பாகிய இயக்குனர்..!! குழப்பத்தில் படக்குழுவினர்..!!


ஓரளவுக்கு முன்னணி ஹீரோயினாக வரும் வரை சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்துதான் ஆக வேண்டும். அப்படித்தான் முன்பெல்லாம் அட்ஜஸ்ட் செய்து கொண்ட ராணி நடிகை, இப்போது தன்னை தேடி வாய்ப்புகள் வருவதால் அட்ஜஸ்ட் செய்ய மறுக்கிறாராம். இந்த அட்ஜஸ்ட்மெண்ட் என்பது சம்பளம் விஷயம்தான்.

பேய்ப் படம் ஒன்றின் மூலம் அறிமுகமான ராணி நடிகை ஆரம்பத்தில் சம்பள விஷயத்தில் ரொம்பவே அட்ஜஸ்ட் செய்துகொண்டார். 20 லட்சம்தான் சம்பளம். அட்வான்ஸ் ஒன்றோ இரண்டோ கொடுத்தால் போதும் என்று விட்டுக்கொடுத்தவர் நடிகை.

இப்போது இளம் ஹீரோக்களின் ஒரே விருப்பமாக ஆகிவிட்டார். எனவே சம்பளத்தை 50 லட்சமாக அதிரடியாக ஏற்றியதோடு முன்புபோல் அட்ஜஸ்ட் செய்துகொள்வதையும் விரும்பவில்லையாம். நடிகையின் இந்த அதிரடி மாற்றத்தால் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் அவரை புக் செய்யலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி