கணவன் அடித்தால் தைரியமாக திருப்பி அடிங்க..!! பிரபல நடிகை அதிரடி டாக்..!!


தனது அப்பா திரைத்துறையில் இருப்பது தெரிந்தும் ஒருவர் தன்னிடம் சில்மிஷம் செய்ததை தைரியமாக அனைவரிடமும் கூறினார் வரலட்சுமி சரத்குமார். அவர் சேவ் சக்தி என்ற அமைப்பை துவங்கி நடத்தி வருகிறார்.

அந்த அமைப்பின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறார் வரலட்சுமி.

மகளிர் தினத்தை முன்னிட்டு சேவ் சக்தி(Save Sakthi) அமைப்பு சார்பில் சென்னை வியாசர்பாடியில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.


எதிர்கால சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் வரலட்சுமி வலியுறுத்தினார்.

கணவன் அடித்தால் மனைவி சும்மா இல்லாமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று வரலட்சுமி கூறினார். பெண்கள் பாதுகாப்பாக இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் வரலட்சுமி. கணவனை திருப்பி அடிக்க வேண்டும் என்று வரலட்சுமி கூறியதை வைத்து நெட்டிசன்ஸ் அவரை கலாய்த்துள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி