தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்தில் அறிமுகமாகின்றார் வாரிசு நடிகர்..!! வியப்பில் திரையுலகம்..!!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தனது மகனை சினிமாவில் அறிமுகம் செய்கிறார், அவரின் முதல் படத்தையே தேசிய விருது பெற்ற இயக்குனரான பாலாவை வைத்து இயக்கவுள்ளார்.

சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. அந்தப் படத்தை தற்போது ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் பாலா.இதில் விக்ரமின் மகன் துருவ், நாயகனாக அறிமுகமாகிறார்.


இந்த நிலையில், தற்போது ‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு நேபாளம் காத்மாண்டுவில் தொடங்குகிறது. இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

ஃபிட்னஸ் கலைஞரை நியமித்து மகன் துருவிற்கு தேவையான பயிற்சிகளை கொடுத்து வந்தார் விக்ரம். அதோடு, அவரது கெட்டப்பையும் தாடி வைத்து மாற்றியிருப்பதோடு, கடின உடற்பயிற்சி மூலம் பாடி லாங்வேஜையும் மாற்றிவிட்டார்.


இந்நிலையில் சீயான் விக்ரம் தற்போது துருவ்வின் புதிய கெட்டப் உள்ள போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இப்படத்திற்கு வசனம் எழுதும் பணியை இயக்குநர் ராஜுமுருகன் மேற்கொண்டு வருகிறார். ‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ படங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ராஜுமுருகன் இப்படத்திற்கு வசனம் எழுதுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி