இரட்டை குழந்தைகளுக்கு தாயாகிய கவர்ச்சி நடிகை..? வைரலாகி அதிர்ச்சி தந்த புகைப்படம்..!


பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபருடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் தத்தெடுத்து தனது சொந்த மகள் போல வளர்த்து வருகின்றனர்

இவரின் இந்த செயல் பாலிவுட்டில் பலரை நெகிழ வைத்துள்ளது


இந்நிலையில் தங்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக சன்னி லியோனும் அவரது கணவரும் இன்று அறிவித்துள்ளனர். என்ன இது சன்னி எப்போது கன்சிவாக இருந்தார், இது தொடர்பாக எந்த ஒரு போட்டோவும் வெளியாகவில்லையே என்று யோசிக்க வேண்டாம், ஏனெனில் இந்த குழந்தைகள் வாடகைத்தாய் மூலம் பிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


குழந்தைகளுக்கு நோவா சிங் வெபர் மற்றும் அஷெர் சிங் வெபர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்திருந்த புகைபடம் வைரலாக ஆரம்பித்துள்ளது

ட்விட்டரில் சன்னி லியோன் வெளியிட்டுள்ள பதிவில், கல்யாண வாழ்க்கையில் குறுகிய காலத்திலேயே மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆகப்போகிறோம் என்பதை நானும் டேனியல் வெபரும் தற்போது தான் தெரிந்துகொண்டாம் என்று பதிவிட்டுள்ளார்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி