ஸ்ரீதேவியின் கணவருக்கு துபாயில் இருந்து வெளியேற தடை..!! அரசு அதிரடி உத்தரவு..!!


ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் துபாயில் இருந்து வெளியேறக் கூடாது என்று துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து துபாய் போலீஸ் பிராசிகியூஷன் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.


ஸ்ரீதேவியை கடைசியாக உயிரோடு பார்த்த அவரின் கணவர் போனி கபூரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மும்பை வந்த அவர் மீண்டும் சனிக்கிழமை மாலை துபாய் சென்றது குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் விசாரணை நடத்திய போலீசார் தாங்கள் சொல்லும் வரை துபாயை விட்டு வெளியேறக் கூடாது என்று உத்தரவிட்டதுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரித்துக் கொண்டிருப்பதால் அவரின் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க துபாய் போலீஸ் பிராசிகியூஷன் கிளியரன்ஸ் சான்று கொடுக்காமல் உள்ளது.

துபாய் போலீஸ் இன்று கிளியரன்ஸ் சான்று வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து எம்பாமிங் செய்யப்பட்டு ஸ்ரீதேவியின் உடல் இன்றே இந்தியா கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி