வாழ்க்கையை போராடி வாழ்ந்து காட்டிய ஸ்ரீதேவி..!! யாரும் அறியாத கண்ணீர் பக்கங்கள்..!!


பொதுவாக தமிழ் திரையுலகில் உள்ளவர்கள், பாலிவுட் திரையுலகில் புகழ் பெறுவது என்பது மிகவும் கடினமான விஷயம்,அதுவும் ஒரு பெண் அங்கு சென்று தனக்கென ஒரு இடத்தை பிடிப்பது சாதாரண விஷயம் அல்ல

இன்று வரை பாலிவுட்டில் நம்பர் ஒன் நட்சத்திரமாக இருக்கும் தென்னிந்திய நடிகர், நடிகையர் யாரும் இல்லை. ஒரே ஒருவரை தவிர. அவர் தான் ஸ்ரீதேவி என்றால் அது மிகை இல்லை..

ஸ்ரீதேவி ஒரு நடிகையாகத்தான் பெரும்பாலோனோருக்கு தெரியும்…அவரை பற்றி யாரும் அறியா சில விஷயங்கள்


ஆனால் அவர் தன் அம்மாவின் மூளை அறுவை சிகிச்சையை , வலது இடது மாற்றி செய்த மருத்துவமனை மீது வழக்கு தொடுத்து, தனியாளாக, அரசியல் எதிர்ப்புக்கு அஞ்சாமல் வென்றுள்ளார்

ஆண் வாரிசு இல்லாத அவரது வீட்டில் தன் அம்மாவின் இறுதிச்சடங்கை இவரே சுடுகாட்டுக்கு போய் செய்து வந்துள்ளார்.

பெரும்பாலான சொத்துகள் உறவுகளால் அபரிக்கப்பட்ட போதும் ஐயோ போச்சேன்னு கூப்பாடுபோடாமல், போனால் போகட்டும்னு விட்டுட்டு தனியாளாக நின்று திரைதுறையில் சம்பாதித்துள்ளார்


வட இந்தியாவில் திரையுலகில் நிலைத்து நிற்பது சாதாரணமில்லை. ரஜினி கமல் கூட அங்கே தாக்கு பிடிக்க முடியவில்லை. ஆனால் இவர் தன் திறமையால் அனைவராலும் ஏற்று கொள்ளபட்டார்.. சாதித்தும் காட்டியவர்.

தனக்கு பிடித்த மணவாழ்க்கையை அமைத்து கொண்டு வாழ்ந்து காட்டியவர்…பெண்ணின் வலிமையை தன்னுள் உணர்ந்தவர்.

புரட்சிஎன்பது சொல் அல்ல செயல்..திரையுலகையும், பூவுலகையும் விட்டு மறைந்தாலும் சினிமா என்ற ஒன்று இருக்கும் வரை ஸ்ரீதேவியின் புகழ் என்பது எப்போதும் நீங்காமல் இருக்கும்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி