நள்ளிரவில் தாயின் மரண செய்தியை அறிந்து கதறி அழுத ஸ்ரீதேவி மகள்..!! சோகத்தில் குடும்பத்தினர்..!!


அம்மாவின் மரண செய்தியை கேட்டு ஸ்ரீதேவியின் முத்த மகள் ஜான்வி கதறி அழுதுள்ளார்.நடிகைகளின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ஸ்ரீதேவி(54) நேற்று துபாயில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரின் மரணம் செய்தி திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் ரஜினி உட்பட திரைப்பிரபலங்கள் பலர் மும்பைக்கு விரைந்துள்ளனர்.ஏனெனில் இன்று இரவு ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் மற்றும் பொலிஸ் அறிக்கையில் செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இன்று இரவு அவரது உடல் மும்பை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் அவரது உடல் நாளை மும்பைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த பெண் ஜான்வி, இளையவர் குஷி. இருவருக்கும் ரோல் மாடலாக விளங்கியவர் ஸ்ரீதேவி.

அவரின் மூத்த மகள் ஜான்வி கதாநாயகியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். மும்பையில் அவர் நடிக்கும் முதல் படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தாயுடன் அவர்துபாய்க்குச்செல்லவில்லைநேற்று நள்ளிரவில் தன்னுடைய அம்மாவின் மரணச் செய்திக் கேட்டு ஜான்வி கதறித் துடித்தார்.ஸ்ரீதேவியின் இழப்பு திரைத் துறைக்கு ஏற்பட்டிருந்தாலும், ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது அவரது குடும்பத்துக்கு ஏற்பட்டு விட்டுள்ளது. ஜான்வி, குஷி மற்றும் போனி கபூருக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் ஆறுதல் அளித்து வருகின்றனர்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி