அறந்தாங்கி நிஷாவிற்கு இப்படியொரு நிலைமையா..?


கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் அறந்தாங்கி நிஷா.

இவர் பள்ளி கல்லூரிகளில் படித்தபோது இவரது நிறத்தை வைத்து கருத்தம்மா என கேலி செய்துள்ளனர். இவர் தனது மைனசையே பிளசா வைத்து கொண்டு மேடை பேச்சில் சிறந்து விளங்கினார்.

10 வருடத்திற்கும் மேலாக மேடைகளில் நகைச்சுவையாக பேசி கலக்கி வந்துள்ளார்.

இதனை பார்த்த கலக்கப்போது யாரு இயக்குனர் தாமஸ் இவரை கலக்கப்போது யாரு சீசன் 5ல் களமிறக்கினார். அதில் 2வது இடம் பிடித்து அசத்தினார்.


இதனை தொடர்ந்து விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார்.

தற்போது சமுத்திரகனியின் ஆண் தேவதை படத்திலும், விஷாலின் இரும்பு திரை படத்திலும் நடித்து வருகிறார். மேலும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

மனோரமா, கோவை சரளாவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெண் காமெடி நடிகைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை இவர் நிரப்புவார் என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!