நெருக்கமாகும் ஆரவ்வை உதறி தள்ளும் ஓவியா..! பழி வாங்குகிறாரா?


பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவை ஓவியா உயிருக்கு உயிராக காதலித்தார். ஆனால் இந்த காதலை காயத்ரி, சக்தி ஆகியோரின் பேச்சை கேட்டு ஆரவ் ஏற்று கொள்ளவில்லை. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஓவியா நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறினார்.

வெளியில் வந்த பின்னர் ஆரவை தூக்கி எறிந்தார் ஓவியா. இனிமேல் ஆரவுடன் சினிமாவில் கூட ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் ஓவியாவுடன் ஜோடி சேர தயார் என ஆரவ் தெரிவித்தார்.


இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ்வுக்கு முன்னணி இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏற்கனவே விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படத்தில் ஆரவ் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருந்தாலும், முதல் முறையாக இந்த படத்தில்தான் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை ஓவியா-வை தொடர்புகொண்டுள்ளது தயரிப்புகுழு. ஆனால், ஹீரோ ஆரவ் என்று சொன்னதும் “சாரி..! என்னை மன்னிச்சுடுங்க..! ப்ளீஸ்..!” என போனை கட் செய்துள்ளார் அம்மணி.

ஆரவ்-விற்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஓவியாவிடம் மீண்டும் ஒரு முறை பேசிபார்க்கலாமா என்ற முடிவில் இருக்கிறதாம் தயாரிப்பு குழு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!