சினிமா நடிகை என்றாலே அது ஒரு சொர்க்க லோகம் என வெளியில் இருந்து பர்ப்பவர்களுக்கு தெரியும்.
நடித்து முடித்து வாய்ப்புகள் குறைந்து உடன் யாராவது ஒரு தொழிலதிபர் அல்லது தொழிலதிபர் என கூறப்படுவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவார்கள்.
அதே வேகத்தில் விவகாரத்தும் பெற்று விடுவார்கள்.
திருமணம் செய்து கொண்டு நீண்ட காலம் சேர்ந்து வாழும் ஜோடிகள் வெகு சிலரே.
இந்த நிலையில் சினிமாவில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னிகளாக இருந்து திருமணமே வேண்டாம் என இருப்பவர்கள் வெகு சிலரே.
அதில் நக்மாவும் ஒருவர். 41 வயதாகும் இவர் ஜோதிகாவின் அக்கா. இவர் திருமணமே வேண்டாம் என கூறி தனியாக வாழ்ந்த வருகிறார். தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து சேவையாற்றி வருகிறார்.
அதே போல கவுசல்யா. இவர் முரளியின் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் அறிமுகமாகி விஜய் போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தவர். இவரும் திருமணத்தை வெறுத்து தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
நடிகை ஷோபனா. பழம்பெரும் நடிகை பத்மினியின் உறவினர். இவரும் எவ்வளவோ எடுத்து கூறியும் திருமணத்தை மறுத்து வருகிறார். இவருக்கு 45 வயதாகிறது.
நடிகை சதா 32 வயதான இவர் ஜெயம், அந்நியன் படத்தில் நடித்தபோது ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். பெரிய லெவலுக்கு வர வேண்டியவர் வடிவேலுவுடன் எலி படத்தில் ஜோடி சேரும் அளவிற்கு மார்க்கெட் டல்லடித்தது. இவரும் திருமணத்தை மறுத்து வருகிறார் என கூறப்படுகிறது.
ஸ்ரேயா ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடிக்கவில்லை என்றால் என்னவாகி இருப்பார் என்று கூறமுடியாது. 34 வயதான இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே போல தபு மற்றும் சுஷ்மிதா சென் ஆகியோரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்கள். சினிமாவில் பல திருமணத்தை பார்த்த இவர்களுக்கு நிஜ வாழ்க்கையில் திருமண பாக்கியமே இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி