திருமணத்திற்கு பிறகு சமந்தாவால் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! அது என்ன தெரியுமா..?


அவர் தெலுங்கில் நடித்து வரும் ‘ரங்கஸ்தலம்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்திருக்கிறது. இந்தப் படம் மார்ச் 30-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. தமிழில் விஷால் ஜோடியாக நடித்திருக்கும் ‘இரும்புத்திரை’, தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகவிருக்கும் ‘மகாநதி’ ஆகிய படங்கள் மார்ச் 29-ம் தேதி வெளியாக இருக்கின்றன.

நடிகை சமந்தா சினிமா நடிகைக்கு திருமணமாகிவிட்டால் வாய்ப்புகள் குறையும் என்பது பொதுவான பேச்சு. ஆனால், சமந்தா அந்த எண்ணத்தை முற்றிலுமாக உடைத்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளன.

ராம்சரண் தேஜாவுடன் சமந்தா நடித்துள்ள படம் ‘ரங்கஸ்தலம்’. சுகுமார் இயக்கியுள்ள இந்த படம் 1980-களில் நடக்கும் கதையில் உருவாகியிருப்பதால், அந்தக் காலகட்டத்து பெண்ணாகவே தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடித்துள்ளார் சமந்தா.


சமந்தா கிராமத்து கெட்டப்பில் சில மாடுகளை இழுத்துச் செல்லும் சில புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.

அதையடுத்து, இந்த படத்தில் சமந்தா நடித்துள்ள வித்தியாசமான கெட்டப் குறித்து அறிய ஆவலாக இருப்பதாக அவரது ரசிகர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் ரங்கஸ்தலம் படத்தின் டீசர் வெளியானபோது அதில் சமந்தா இடம்பெறவில்லை. முழுக்க முழுக்க படநாயகன் ராம்சரணே இடம்பெற்றிருந்தார். இதனால் சமந்தாவின் ரசிகர்கள் பெருத்த அதிர்ச்சியடைந்தனர்.

சமந்தா மட்டுமே இடம்பெறும் டீசர் விரைவில் வெளியாகயிருப்பதாக அப்பட இயக்குனர் சுகுமார் தற்போது அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மீண்டு குஷியாகியுள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி