இந்த பொண்ணு இன்னும் திருந்தவே இல்லையா..? செம்மையா கலாய்க்கம் நெட்டிசன்கள்..!!!


ஜல்லி கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி.

அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி கலந்து கொண்டார். ஆனால் ஜூலி நிகழ்ச்சியில் நடித்த நடிப்பால் மக்கள் அவர் மீது வெறுப்பு அடைந்தனர்.

நிகழ்ச்சி முடிந்து ஜூலி வெளியே வரும் போது மக்களின் வெறுப்பை தான் அதிகம் சம்பாதித்தார்.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலிக்கு கலைஞர் டிவியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.


அது மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்தில் வெளியான விமல் நடித்த மன்னார் வகையறா படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்துள்ளார்.

இதனையடுத்து ஜூலி உத்தமி என்ற ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இன்னும் அந்த படத்தின் சூட்டிங் கூட துவங்கவில்லை. ஆனால் அதற்குள் தன்னுடைய கால்ஷீட் வேலைகளை கவனிக்க தனக்கென ஒரு மேனஜரை ஜூலி வைத்துள்ளாராம்.

இது ஜூலிக்கே சற்று ஓவராக தெரியவில்லையா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி